ptc பக்கங்கள் என பல விளம்பரங்கள் வருகின்றன. சிலர் தமக்கு பணம் கிடைத்ததாக ஆதாரங்களைக் கொடுத்து இணையுங்கள் என சொல்கிறார்கள்.ஆனாலும் சில நாட்களில் அவர்களே பணம் வராமல் ஏமாந்து விடுகின்றனர். பல தளங்கள் உண்மையிலேயே சிறப்பாக செயல்படுகிறார்கள். அனுபவம் தான் சிறந்த மருந்தாகும். ஒரு வாரம் முயற்சித்து பணத்திற்கு விண்ணப்பித்து வராவிட்டால் மறந்து விடலாம்.
எக்காரணம் கொண்டும் பதிவு செய்து கொள்ள பணம் கேட்டால் அவை ஏமாற்று.
சென்னையில் பலர் ஏமாந்த கதையும்,சிலர் கைபேசி மூலம் -என் நண்பர் உட்பட- ஏமாந்த கதைகள் பல உண்டு.நம்மவர்களே இப்படியான தில்லுமுல்லுகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள். தமிழன் ஏமாறவும் ஏமாற்றப்படுவதற்குமே பிறந்தவன்.இது தலைவிதி.