எனக்குத் தெரிந்த வரையில் வேதிப் பொருட்களின் பங்கு இல்லை எனத் தோன்றுகிறது.
ஏனெனில்,...நிறங்கள் இரண்டு விதமாக பிரிக்கப்படுகிறது.ஒளியின் அடிப்படை நிறங்கள்(addictive color) நீலம்,சிவப்பு,பச்சை. இவை கலக்கப்படும் போது வேறு நிறங்கள் உருவாகிறது.அதே சமயம் நிறக் கலவைகளில் அடிப்படை நிறங்கள்(subtractive colors) சிவப்பு,நீலம்,மஞ்சல் ஆக இருக்கிறது.ஆனால் ஆச்சரியம் என்னவென்றால்,ஒளிக் கதிர்களில் கீழ்கண்டவாறு நிறங்கள் சேருகின்றன.அதுவே நிறக் கலவைகளை(paint) சேர்க்கும் போது வேறு மாதிரியாக அமைகின்றன.
ஒளிக் கதிர்கள் சேரும் போது..............
நீலம் + சிவப்பு = கருஞ் சிவப்பு
நீலம் + பச்சை = மயில் நீலம்
சிவப்பு +பச்சை =மஞ்சள்
சிவப்பு + பச்சை + நீலம் =வெள்ளை.
இதுவே நிறக் கலவைகளானால்(paint)...............
சிவப்பு +நீலம் =ஊதா
சிவப்பு +மஞ்சள் =ஆரஞ்சு
நீலம் +மஞ்சள் =பச்சை
நீலம் +சிவப்பு +மஞ்சள் =கறுப்பு.
நிறக் கலவைகளின் போது வேதிப் பொருட்களின் பங்கு உள்ளது.ஆனால் ஒளி மூலமான நிறக் கலவையின் போது வேதிப் பொருட்களின் பங்கு இல்லை என்றே தோன்றுகிறது.